‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கும்பலின் தலைவன்’
-நஜீப் பின் கபூர்-
1998ல் தெற்கு பெந்தரை கடற்கரையில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற சவுதி பிரசை அங்கு ஒரு சிறுவனுக்கு சில்மிசம் செய்த போது, அவன் அயலவர்களிடம் முறைப்பட, அவர்கள் அந்த நபரைத் தாக்கி இருக்கின்றார்கள். அப்போது அவர் தப்பி ஓடியபோது அவருக்கு துணைக்கு வந்திருக்கின்றார் ஒரு பீச் போய்;.
இதனால் இருவருக்கும் நட்பு. பின்பு பீச் போயுடன் இந்த சவுதியருக்கு ஒருபால் உறவு. இந்த நட்பும் உறவும் காரணமாக சவுதிக்காரர் இவருக்கு ‘ரோயல் பீச் ஹோட்டலை’ கட்டிக் கொடுத்திருக்கின்றார். அந்த பீச் போய்தான் இந்த ‘அபே ஜனபல கட்சித்’ தலைவர் சமன் பெரேரா.
அவர் மீது போதை, பாதாள தொடர்பு கொலைகள் என நிறையவே குற்றச்சாட்டுக்கள்-வழக்குகள்.. அப்படி ஒரு வழக்குக்கு ஹம்பந்தோட்டை நீதி மன்றம் செல்லும் போதுதான் இந்தத் தாக்குதல்.
அவரது கட்சியில்தான் கலபொட அத்தே ஞானசார, அதுருலியே தேரர் போன்றோர் தேசபக்த பௌத்த அரசியல் செய்து ஒரு ஆசனத்தை எடுத்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காசு செலவு செய்தவரும் ஆட்களை இயக்கியதும் இந்த பீச் போய்-சமன்.
முஸ்லிம் விரோத வன்முறைகளுக்கு இந்த டிபேன்டர்தான் பாவிக்கப்பட்டிருக்கின்றது. சமன் பெரேரா கொல்லப்படுவதற்கு முன்னர் சஜித் அணியில் இணைய பேச்சுவார்த்தைகளையும் இவர் நடாத்தி இருந்தார்.