சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம்-நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் நேற்று  சிறையில் இருந்து விடுதலையாகி வெளியேறினர்.

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து முதலில் விடுதலையான நளினி சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.

அகதி முகாமில் இருக்கும் முருகனை மகளுடன் சேர்த்து வைக்க வேண்டும்

சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம்-நளினி | Imprisonment Great University Nalini

செய்தியாளர் சநதிப்பில் கருத்து வெளியிட்டுள்ள நளினி, தமிழக அகதிகள் முகாமில் இருக்கும் தனது கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவர் முருகனுடன் வசிக்க அனுமதி கேட்டுள்ளேன்.

அகதிகள் முகாமில் உள்ள கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வைக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கின்றேன்

நான் சிறைக்கு சென்ற நாளில் இருந்தே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நம்பிக்கையுடன் இருந்தேன். சிறைக்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணிய சந்தர்ப்பங்கள் ஏராளம்.

சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம்-நளினி | Imprisonment Great University Nalini

அனைவருக்கும் தூக்கு தண்டனை ரத்தாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. விடுதலைக்கு உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜீவ் காந்தி குடும்பத்தினரை பார்ப்பதற்கு எனக்கு தயக்கமாக உள்ளது. இந்த குண்டு வெடிப்பில் பிரதமரே உயிரிழந்தது வருத்தத்திற்குரியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருத்தப்படுகிறேன். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம். நிறைய வி்டயங்கள் கற்று கொண்டேன்.

மகளுடன் லண்டனில் வசிக்க விரும்புகிறேன்

நான் விடுதலையானது குறித்து சிறை காவலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன்.

லண்டனுக்கு சென்று எனது மகளுடன் வசிக்கவே விரும்புகிறேன். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த 10 மாத சிறை விடுப்பு எனக்கு பெரும் உதவியாக இருந்தது என நளினி மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Story

ஊர் சிரிக்கும் 2023 பஜெட் நாளை!

Next Story

பிர்தௌசியாவுக்கு 2022 அரச இலக்கிய விருது!