ஐதேக.அமைப்பாளராக ரிசான் ஹலிம்தீன் நியமனம்

ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைப் புனரமைக்கின்ற பணிகள் தற்போது துரிதமாக நாடுபூராவிலும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் அண்மையில் பாததும்பறை வட்டாரங்களுக்கான ஐதேக. அமைப்பாளர்கள் நியமனங்களை சிரிகொத்த தயாரித்து வழங்கி இருக்கின்றது.

உடதலவின்ன மற்றும் கலதெனிய ஆகிய பெரும் பிரதேசங்களுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக ரசான் ஹலிம்தீன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான திருமதி சாந்தினி கொங்காகேயினால் இந்த நியமனம் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவர் நடைபெற இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மேற்படி வட்டாரங்களுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகவும் இருந்தார்.  இவருக்கான வேட்பாளர் நியமனத்தை நேரடியாக சிரிகொத்தவினால் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாததும்பறை தொகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் அண்மையில் மெனிக்கின்னை-நாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதற்கு ஜனாதிபதி ரணிலின் பிரதிநிதியாக அங்கு சாகல ரத்னாயக்காவும் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் பாததும்பறை பிரதேச சபையில் நீண்ட காலம் தவிசாளராக இருந்த சுதர்மா வெலகெதரவும் இந்த வைபவத்தில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

மேற்குக் கரையில் கொடூரம்!

Next Story

பொலன்னறுவையில் கோர விபத்து: 10 பேர் பலி!