அணுர தேடும் பழங்கள்!

நஜீப்

வருகின்ற தேர்தலில் நாம் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என ஜேவிபி. கட்சியின் தலைவர் அணுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார். ஒரு மாற்றத்துக்கு ஆர்வமாக வரும் தனி  நபர்களையும் சிவில் அமைப்புக்களையும் நாம் அரவணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

நம்முடன் கூட்டணி அமைத்துக் கொள்ள பல அரசியல் கட்சிகள் ஆர்வமாக இருக்கின்றன-வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் எல்லோரையும் நமக்கு உள்வாங்கிக் கொள்ள முடியாது. வருகின்றவர்களின் கடந்த கால அரசியல் மற்றும் தனிப்பட்ட வழ்க்கை தொடர்பாகவும் தேடிப் பார்துத்துத்தான் நாம் அவர்கள் தொடர்பான தீர்மனங்களுக்கு வர முடியும்.

இந்த நாட்களில் கனித்த பழங்கள் மரத்தடியில் வீழ்ந்து கிடப்பது போல அரசியல் செயல்பாட்டாளர்கள் நிறையவே தெருவில் இருக்கின்றார்கள். இதில் கெட்டுப்போன பழங்களும் கணிசமாக இருக்கின்றன. அவற்றை தேடிப்பார்த்து உண்பது போலத்தான் நாம் வருகின்றவர்களைப் பற்றித் தீர்மானிக்க வேண்டி இருக்கின்றது. நாம் அப்படி நடந்து கொண்டால்தான் ஒரு கட்டுக் கோப்பான பயணத்தை எம்மால் தொடர முடியும் என்பது அவர் வாதம்.

நன்றி: 22.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாலத்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்!

Next Story

நாமல் மின்சாரக் கட்டணம்!