உள்ளேயும் வெளியேயும் கோமாளிகள்!

-நஜீப்-

நாடாளுமன்றதில் ஒரே ஒரு ஆசனத்தை வைத்திருக்கும் ஜனாதிபதி ரணில் வார்த்தைகள் மீது மிகுந்த விசுவாசத்தில் மூத்த தமிழ் தலைமைகள் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி.

இதே ரணிலை நல்லாட்சியில் பதவிக்கு அமர்த்துவதிலும் இந்தத் தமிழ் தலைமைகள் பாரிய பங்களிப்புச் செய்ததும் உலகமே அறியும். அந்த நாட்களில் உரிமையுடன் காரியம் பார்க்கத் தெரியாது கோட்டை விட்டவர்கள் இப்போது நாட்டிலும் உலக அரங்கிலும் கோமாளியாக இருக்கும் ஒருவர் வார்த்தைகளை நம்பி சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பது எந்த வகையான இராஜதந்திரம்.?

சரி அவர்கள்தான் தமது பிழைப்புக்கும் இருப்புக்கும் ஏதாவது சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

புத்திகூர்மையானவர்கள் அறிவு ஜீவிகள் என்று உலகம் பார்க்கின்ற  ஒரு இனம்-சமூகம் இப்படியான அரசியல் தலைமைகளிடத்தில் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஏமாந்து கொண்டிருக்கப் போகின்றது.?

இவர்களை நம்பி தொடர்ந்தும் பாதிக்கப்படும் சமூகம் எப்படி இவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கப்  போகின்றது என்பதைத்தான் இதன் பின்னர் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 04.12.2022

 

 

Previous Story

ரணில் தொடர்பில் பசில்: பகிரங்க மன்னிப்பும் கோரினார் !

Next Story

குஜராத்தில் பாஜக, இமாச்சலில் காங்கிரஸ்: தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள்  என்ன?