உலகில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் வரிசையில் புட்டின், பைடன், சீ சின்பிங், மோடி என்பதுதான் நாம் அறிந்திருக்கின்ற தகவல். ஆனால் உலகிலே மிகவும் வலிமையான தலைவர் ரணில்.
இப்படி ஒரு போடு போட்டிருக்கின்றார். ஐதேக. நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. ஒரு ஆசனத்தை வைத்தக் கொண்டு அவர் ஜனாதிபதியாகவும் அவரது நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு வஜிரவையும் நியமனம் செய்ததைப் பார்க்கின்ற போது கதை உண்மைதான்.!
நம்மைப் பொறுத்தவரை இதனை நாம் இந்த வார நகைச்சுவையாகத்தான் பார்க்கின்றோம். வாசகர்களே இந்தக் கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். வெளியில் சொல்லாதீர்கள்.! காகத்துக்கு தன் குஞ்சுக் கதை என்று இருந்து விட்டுப் போகட்டும்.
இராணுவ, காவல் துறையை வைத்துத்தான் எதிர்காலத்தில் ரணில் தனது வலிமையை காட்சிப்படுத்த வேண்டி இருக்கும். பழைய படி எரிபொருள் நெருக்கடி பட்டணி எல்லாம் வரிசையாக வரும் போது இந்த வலிமையான தலைவர் என்ன பண்ணுகின்றார் என்று பார்ப்போம்.
நா கூசாமல் இப்படி எல்லாம் வார்த்தைகளைப் பேசுகின்றவர்கள்தான் இன்று அதிகாரத்தில் இருக்கின்றார்கள். அப்போ?