பிந்திய தகவல்: ஜனாதிபதி டலஸ்-பிரதமர் சஜித்

நமக்குக் கிடைக்கின்ற மிகப் பிந்திய தகவல்களின் படி ரணில் ஜனாதிபதியாவதைத் தடுப்பதற்கு டலஸ் ஜனாதிபதியாகவும் சஜித் பிரதமராகவும் நியமனம் பெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அல்லது பதவிகள் தலைகீழாக மாற்றமாகவும், அதாவது சஜித் ஜனாதிபதி டலஸ் பிரதமராகவும் நியமனமாகலாம். இது இடைக்கால அரசுக்கான முன்னேற்பாடாக இருக்கும்!

எக்காரணம் கொண்டும் எல்லை மீறி ராஜபக்ஸாக்களுக்கு கடைக்குப் போனவர்களுக்கு இந்த இடைக்கால அரசில் எந்தப் பதவிகளும் இல்லை என்ற நிலையும் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில் கோட்டா தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நாட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற உதவுமாறு சபாநாயகரை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கோட்டுக் கொண்டிருக்கின்றார்.

அப்படியானால் தான் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து விரட்டிவிடுவதாகவும் ஜனாதிபதி கோட்டா குறிப்பிட்டிருப்பதாகவும் நமக்கு வந்த அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Story

பதவி விலக கோட்டா நிபந்தனை ! 

Next Story

மாலைக்கு ஓடிய கோட்டா!