நன்றி:
19.07.2026 ஞாயிறு தினக்குரல்
தனது மகன் சகிதவும் அவரது சகாக்களும் டுபாயில் ஹரக்கடா மனைவியுடன் டீல் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்ற நாட்களில் தானும் டுபாயில் இருந்ததை விஜேதாச ஏற்றுக் கொள்கின்றார்.
ஆனால் அதற்கு மனிதன் கொடுக்கும் விளக்கம் வேறு. நானும் அலி சப்ரியும் தென் ஆபிரிக்கா போய் வரும் வழியில் உபாதைகளுக்கு மருந்து எடுக்கத் தான் டுபாயில் இறங்கியதாகவும்.
இரு நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்தபோது மகனை அங்கு சந்தித்ததாகவும் அவர் ஒரு நேர்காணலில் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.
விஜேதாசவின் இந்த நாடகப் பிரதிகள் பற்றி குடிமக்கள் என்னதான் நினைக்கின்றார்களோ தெரியாது. நமது அரசியல்வாதிகள் வித்துவான்கள்-பண்டிதர்கள் அவர்களுக்குத்தான் அனைத்தும் தெரியும்.
குடிகளுக்கு ஒன்றும் புரியாது என்ற ஒரு காலமும் நமது நாட்டில் இருந்தது. அது இப்போது மலையேறிவிட்டது. தகவல்களைக் குடிகள் அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப் பார்க்கும் ஒரு காலமல்லவா இது.!




