-நஜீப்-
முன்னாள் ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான சு.அணி தற்போது மூன்று கூறாக பிளவு பட்டிருக்கின்றது. ஒரு தரப்பினர் இந்த அரசு பதவியில் இருக்கின்றவரை அதனுடனே ஒட்டி இருந்து பயணிக்க வேண்டும் என்ற தரப்பு. அவர்களுக்கு ஏதோ பதவி பட்டங்கள் இருக்கின்றன.
மற்றுமொரு கோஷ்டி மதில் மேல் பூனை போல் நிற்கின்றது. மூன்றாவது தரப்பு இந்த அரசில் இருந்து வெளியேறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று வாதம் புரிகின்றது. ஆனால் தலைவர் மைத்திரி தான் எந்தப் பக்கம் என்பது அவருக்கே புரியாமல் இருக்கின்றார். அல்லது இருக்க வேண்டி நிலை.
இது தவிர ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலும் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டு வருகின்றது.
குமார் வெல்கமவும் இந்த அணியில்தான் இருக்கின்றார். மேற்சொன்ன மூன்று அணிகளில் உள்ள பலர் சந்திரிக்கா அம்மையுடன் இரகசிய உறவில் இருக்கின்றார்கள்.
நன்றி ஞாயிறு தினக்குரல் 16.01.2022