மலேசிய போட்டியில் உடதலவின்ன ஸொஹா சாதனை

ஏழு நாடுகளுக்கிடையே மலேசியா-கோலாலம்பூரில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் மடிகே- உடதலவின்னயைச் சேர்ந்த ஸொஹா ரிஸ்வான் தான் பங்கு பற்றிய பிரிவில் இரு இடங்களைக் கைப்பற்றி தான் கல்வி கற்கும் மடவலை – லோயல் கல்லூரிக்கும் பிறந்த ஊருக்கும் தனது நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.


இவர் மடிகே-உடதலவின்ன முஹம்மத் ரிஸ்வான் மற்றும் பாத்திமா ஸப்கா அகியோரின் அன்புப் புதல்வியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் பங்கு பற்றிய பிரிவில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 2500 வரை போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையிலே அவர் அந்த இரு பிரிவில் 4ம் 5ம் இடங்களைக் கைப்பற்றி இந்த சாதனையை நிலைநாட்டி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஜனாதிபதிக்கு 240 மணி நேர அவகாசம்

Next Story

வாராந்த அரசியல் 07.07.2024