புதிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

Sri Lanka's top sleuth drops cluster bomb over Easter probe - Daily Express

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இந்த பதவிக்கு எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம் | New Defence Secretary Appointed

சம்பத் துயகொண்டா இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 MI 24 தாக்குதல் ஹெலிகொப்டர் படைப்பிரிவின் விமானியாகப் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) தொடர்புகளை பேணியமைக்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous Story

தமிழருக்கு புதிய தலைமை!

Next Story

தப்பியோடுவோரும் தலைமறைவாவோரும்!