தம்மிக பற்றி அணுர!

 -நஜீப்-

தம்மிகப் பெரோரா என்ற கோடிஸ்வரர் நாடாளுமன்றம் பிரவேசித்திருக்கின்றார். ரணிலைத் தூக்கிவிட்டு ஆளைப் பிரதமராக்கிப் பார்ப்போம் என்று ஒரு கோஷ்டி ஓடித்திரிகின்றது. இவர் பெரும் ஊழல் பேர்வளி. வரிசெலுத்தாமால் கோடிக் கணக்கில் ஆப்புவைத்த குற்றவாளி என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றது. இவர் வருகை பற்றி அணுரவைக் கேட்ட போது> அவர் சொன்ன கதையைக் கேளுங்கள்.

ஆம் இப்படி நாட்டை மீட்பதாக பலர் வந்து போய் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் மட்டும்தான் இவர். விகாரமகாதேவிகளைப் பார்த்திருக்கின்றோம். ஆசியாவின் ஆச்சர்யம் பண்ண வந்தவர்கள்; பார்த்தோம். துட்டகைமுனுக்களைக் கண்டோம். பொலன்னறுவை கிராமத்து விவசாயியைப் பார்த்தோம்.  நாட்டை பாதுகாக்க வந்தன் தளபதி பங்கருக்குள் தலைமறைவு வாழ்க்கை நடத்துவதையும் பார்த்தோம். ஏழுதலை வித்தகனையும் பார்த்தேம்.

அந்த வரிசையில் வரும் ஒருவர்தான் இந்த தம்மிக்க பெரேராவும். பொருத்திருந்து பாருங்கள் இவரால் எதையாவது இந்த நாட்டில் சாதிக்க முடிகின்றதா என்பதை என்று சவால் விடுகின்றார் அணுரகுமார திசாநாயக்க!

நன்றி:26.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரணில் OUT!  தலைவிதியை தீர்மானிக்கும் பசில்

Next Story

நுபுர் சர்மாவின் ஆதரவாளர் படுகொலை! இருவர் கைது!