சஜீத் அணியில் கடும் மோதல்! 

நஜீப்

தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற இரண்டாவது பெரிய கட்சி சஜித் அணிதான். ஆனால் அந்தக் கட்சியில் கட்டுக்கோப்பில்லாத ஒரு நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

தாம் அதிகாரத்துக்கு வந்தால் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக தலைவர் சஜித் மேடைகள் தோரும் கூவித் திரிந்தாலும் அவரைச் சுற்றி பெரும் ஊழல் பேர்வளிகளும் கள்வர்கள் கூட்டமும்தான் சுற்றி இருக்கின்றது என்று பரவலான குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் தலைவருக்கு எதிராக கட்சி முக்கியஸ்தர்கள் தற்போது நேரடியாக பேசியும் செயலாற்றியும் வருவதை பார்க்க முடிகின்றது. அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்னர் அர்ஷ த சில்வா தெரிவித்த சில கருத்துக்கள் தற்போது நாட்டில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

நான் எனது தந்தையின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியல் செய்கின்ற ஒரு அரசியல்வாதி அல்ல. எனது திறமையால்தான் நான் இன்று இந்த இடத்தில் இருக்கின்றேன் என்று அவர் சஜித் முகத்தில் நேரடியாகவே குத்தி இருக்கின்றார்.

இந்த வார்த்தைகள் நேரடியாக சஜித்துக்கு சொல்லப்பட்டது என்பது தெளிவானது. இதனால் இன்று கட்சிக்குள் பெரும் சலசலப்பொன்று ஏற்பட்டிருக்கின்றது. பொன்சேக்கா மயந்த போன்று இன்னும் பலரது நடடிவக்கைகள் கட்சிக்குள் பெரும் குழப்ப நிலை என்பதனை காட்சிப்படுத்துகின்றன.

நன்றி: 12.03.2023 ஞாயிறு தினக்குரல்

 

 

 

Previous Story

சவூதிக்கும், ஈரானுக்கும் வாழ்த்து- அலி சப்ரி

Next Story

மத்திய கிழக்கு அரசியலையே புரட்டி போட்ட சீனா! கை கோர்த்த எதிரிகள் சவுதி - ஈரான்.