இந்தத் தேர்தல் சமூகத்தை விற்றுப் பிழைக்கின்ற அரசியல் தலைவர்களைத் தூக்கி வீசி மக்கள் தமது மனசாட்சிக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களிக்கின்ற ஒரு தேர்தல். பாமர மக்களுக்கு இது விடயத்தில் இளைய தலைமுறை-புத்திஜீவிகள் தெளிவுபடுத்த வேண்டியது அவர்களது சமூகப் பொறுப்பு.
மிகப் பெரிய மோசடிக்காரர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளும் நயவஞ்சகர்களும் யார் என்பதனை கண்டு பிடிப்பது பெரிய காரியம் அல்ல. அவர்கள் யார் என்பது முத்திரை குத்தப்பட்டு விட்டது. இதில் நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
பிழையான தீர்மானங்களை எடுத்தால் அது உங்கள் குழந்தைகளுக்கும் ஏன் இறைவனுக்குக் கூட நீங்கள் பதில் சொல்லியாக வேண்டி வரும்.