பொரளை சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் – 4 பேர் தீவிர சிகிச்சையில்.. 

கொழும்பில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று இரவு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது. இதில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 8.40 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஐந்து இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு

56 கலிபர் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொழும்பு 9 ஐச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய 4 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous Story

அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் கூறியது என்ன?

Next Story

Hiroshima: Rare Images of a World Destroyed