பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் வெடிப்பு: 15 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த காஸ் சிலிண்டர் வெடிப்பில் 15 பேர் பலியாகினர். கராச்சியில் நடந்த இந்த சம்பவத்தால் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கராச்சியில் உள்ள ஷெர்சா பகுதியில் உள்ள வர்த்தக நிறுவன கட்டடத்தில் திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்தது. இந்த வளாகத்தில் பலர் தங்கி இருந்ததாக தெரிகிறது. சம்பவ இடத்தில் 15 பேர் இறந்தனர். காயமுற்ற பலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சம்பவ இடத்தில் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் அல்ல. காஸ் சிலிண்டர் லீக் காரணமாக வெடித்திருப்பதாக தெரிய வந்தது.

Previous Story

டாக்டர்: ஷாபிக்கு தொடர்ந்தும் தொல்லை!

Next Story

ஹாங்காங்கில் இன்று சட்டசபைக்கானதேர்தல