நஜீப்
நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல்
ஒரு தனித்துவத் தலைவர் சலேக்கு வக்காளத்து வாங்கப்போய் கடந்த வாரம் மூக்குடைபட. அதற்கு சில தினங்களுக்குப் பின்னர் நடைபெற்ற இரு நிகழ்வுகள் முஸ்லிம்கள் மத்தியில் அவதானத்தை ஈர்த்திருந்தது என்று சொல்ல வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சலேயுடன் மோதி அதற்காக பலிவாங்கப்பட்டதையும் நாம் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். சில தினங்களுக்குப் பின்னர் அதே இஜாஸ் பாதிக்கப்பட்டவர்களில் நாங்களும் இருக்கின்றோம்.
இதற்கும் நியாயம் வேண்டும் எனக் கோட்டே ரயில் நிலையத்துக்கு முன்னால் ஒரு போராட்டத்தை நடாத்தி இருந்தார். மறுநாள் நிந்தவூரில் நடந்த அஇமக. கூட்டமொன்றில் தலைவர் ரிசாட் பதியுதீன் நமக்குள் என்ன அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் நாம் அரசுக்குப் பக்கதுணையாக இருக்க வேண்டும்.

தாக்குதலில் கிருஸ்தவ சமூகம் உயிர்களை இழந்தது. நம்மையும் பாவித்து சமூகத்தையும் அவமானப்படுத்தி இருக்கின்றார்கள். இவற்றுக்கும் நியாயம் கேட்கிறார் ரிசாட்.





