-நஜீப்-
வருகின்ற தேர்தலில் ஒரு வாக்குக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தாவது நாம் இந்தத் தேர்தலை ஜெயிப்பபோம் என்று தன்னிடம் மொட்டு கட்சி அரசியல்வாதிகள் கூறி இருக்கின்றார்கள் என்று ஊவாவின் வெள்ளி நாக்கு என்று அழைக்கப்படுகின்ற ஜேவிபி. முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரத்தன பதுளையில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூறி இருந்தார்.
அப்படி யாராவது உங்களுக்கு காசு கொடுத்தால் நீங்கள் அதனை வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களிடம் கொள்ளையடித்த பணத்தைதான் அவர்கள் தருகின்றார்கள். இது போல தழிழ் சிங்களப் புத்தாண்டுக்கு இருபது கிலோ அரிசியும் ஜனாதிபதி ரணில் தருவதாகக் கூறுகின்றார் அதனையும் வங்கிக் கொள்ளுங்கள்.
நாட்டை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். கள்வர்களை பிடித்து சிறையில் தள்ள வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு நல்லதோர் தேசம் வேண்டும். உங்களுக்கு மூன்று நேர உணவும் நோய்களுக்கு நம்பிக்கையாக மருந்தும் வேண்டுமானால் திசைகாட்டிக்கு உங்கள் புள்ளடியை மட்டும் தருங்கள் என்று சமந்த கேட்க்கின்றார்.
நன்றி: 31.03.2024 ஞாயிறு தினக்குரல்