வானத்தால் வீழ்ந்த ரணில்!

-நஜீப்-

தனக்குத் தந்தால் செய்து காட்டுவேன். சர்வதேசத்தில் எல்லோரையும் எனக்குத் தெரியும் என்று பதவிக்கு வந்த ரணில். இப்போது ஒரு அங்குலம் கூட நகரமுடியாது அரச மட்டத்திலும் சர்வதேமட்டத்திலும் தனித்து விடப்பட்டிருக்கின்றார். அவர் தொடர்ந்து ஒரு உண்மையையும் பல பொய்களையும் சொல்லிக் காலம் கடத்தி வருகின்றார்.

அவர் நாடு மிகவும் நெருக்கடியில் இருக்கின்றது பட்டினியில் மக்கள் இருக்க வேண்டும் என்ற உண்மையைத் தொடர்ந்தும் சொல்லி வருகின்றார். அதே நேரம் தினம் தோரும் அங்கிருந்து உதவி வருகின்றது இங்கிருந்து வருகின்றது, அவரைப் பேசி இருக்கின்றேன் இவரைப் பேசி இருக்கின்றேன் என்று நாட்டுக்கு கதை அளந்து கொண்டிருக்கின்றார். அவை அனைத்தும் அண்டப் புளுகு அதில் எந்த உண்மைகளும் இல்லை.

இவர் கேட்டாலும் கேட்காமல் இருந்தாலும் இந்த யானைப் பசிக்கு சோளப் பொறி உதவி வரத்தான் செய்யும். ரணில் விவகாரத்தில் அடுத்த நகைச் சுவை என்னவென்றால் அவரை பிரமராக்கியது ஜனாதிபதியோ மொட்டுக் கட்சி உறுப்பினர்களோ இல்லையாம். ஐயோ கடவுளே  ஆள் வானதால் வீழ்ந்து விட்டார் போலும்.? நன்றி:26.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 விமான சேவைகள் முடங்கும் அபாயம்!

Next Story

சர்ஃபராஸ்VSபிராட்மேன்