–நஜீப்-
பாடசாலை மாணவர்களை கொழும்புக்கு சுற்றுலா அழைத்துச் செல்கின்ற போது கொழும்புத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று கப்பல் காட்டுவது முக்கிய ஒரு நிகழ்வாக அண்மைக் காலம் வரை நடந்து வந்திருக்கின்றது
ஆனால் நமது நாட்டில் புதுக் கலாச்சாரமாக எரி பொருள் மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்களை கப்பல்கள் துறை முகத்துக்கு எடுத்து வருகின்ற போது இப்போது மேலதாளங்களுடன் நமது அமைச்சர்கள் துறைமுகத்துக்குப் போய் அந்தக் கப்பல்களை வரவேற்கும் சம்பிரதாயங்கள் துவங்கி இருக்கின்றது.
உலகில் இப்படியான நிகழ்வுகள் எங்காவது நடப்பதை அதாவது அத்தியவசியப் பொருட்கள் நாட்டுக்கு எடுத்து வருகின்ற கப்பல்களை வரவேற்கும் நிகழ்வுகள் நடப்பதை நாம் கேள்விப் பட்டிருக்கின்றோமா?
னவே நாட்டில் அத்தியவசியப் பொருட்களின் தட்டுப்பாடு எந்தளவுக்கு உக்கிரமாக இருக்கின்றது என்பதற்கு வேறு என்னதான் சாட்சிகள் தேவையாக இருக்கின்றது. இலங்கை வரலாற்றில் இது புது அத்தியம்.
நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.02.2022