ராஜா சாகும் வரை அரசியலில்!

-நஜீப்-

(நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்)

அரசியல்வாதிகள் பலர் தமது ஓய்வைப் பகிரங்கமாக அறிவித்து அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஓய்வு பெறப்போகின்றார். அவரது உடல்நிலை சரியில்லை என்று அதற்கு நியாயம் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தான் ஒரு போதும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என்று இப்போது அவர் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். எனவே அவர் சாகும் வரை களத்தில் இருக்கப் போகின்றார்.!

ஆனால் நமது பார்வையில் அதில் உண்மை இல்லை. தனது அரசியல் வாரிசு நாமல் தலைமையிலான அணி தேர்தலில் நிற்கும் இந்த நேரத்தில் முன்கூட்டி மஹிந்த ராஜபக்ஸ  தனது ஓய்வை அறிவித்தால் அல்லது ஏற்றுக் கொண்டால் தனது மகனின் மொட்டுக் கட்சி இந்தத் தேர்தலில் காணமல் போய்விடும் என்று அவர் அஞ்சுவதால்தான் சாகும் வரை களத்தில் என்று அறிவித்து மகனைத் தெம்பூட்டிக் கொண்டிருக்கின்றார் மனிதன்.

படுதோல்வி உறுதி என்று இருந்தாலும் தேசியப் பட்டியலிலாவது வாரிசுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம்.

Previous Story

உயரத்தில் பறக்கும் செங்கொடி!

Next Story

காசாவில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்!