ராஜபக்சாக்கள் பற்றிய கருத்துக் கணிப்பு!

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என 96 வீதமானவர்கள் எதிர்பார்ப்பது டெய்லி மிரரின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்க் பதவி விலகவேண்டும் அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பெருமளவான மக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த மூன்று வாரங்களாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றதை ஏற்று ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலகவேண்டுமா மட்டுப்படுத்தப்பட்ட நிபுணர்கள் அமைச்சரவையை ஏற்படுத்த வேண்டுமா என டெய்லி மிரர் எழுப்பிய கேள்விக்கு 96 வீதமானவர்கள் ஆம் என பதிலளித்துள்ளனர்.

அதேசமயம் 2.1 வீதமானவர்களே ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலககூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தினக்குரல் அரசியல் ஆய்வாலர் நஜீப் பின் கபூர் எழுதி இருந்த கட்டுரையில் 75 சதவீதமான பேரினத்தார் ராஜபக்ஸாக்கள் மீது விரக்த்தியில் இருப்பதானச் சுட்டிக் காட்டி இருந்தும் குறிப்பிடத்தக்கது.

 

Previous Story

இலங்கையின் புதிய பிரதமர் யார்:- பசில் விளக்கம்.

Next Story

வெற்றிகரமாகத் தொடரும் ராஜாக்கள் நாடகங்கள்