ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்? ஒருவர் மரணம்!

ரம்புக்கனையில் இன்று  இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிஸார் துப்பாக்கிச்சூ மேற்கொண்டதில் காயமடைந்த ஏழு  பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்ற நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிவவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து மோதல் வெடித்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.jn

 

Previous Story

"தவறு செய்து விட்டேன், பதவி விலக மாட்டேன்" - ஜனாதிபதி கோட்டாபய

Next Story

மஹிந்த பதவி விலகல் கதை ஒரு நாடகம்-அடுத்த சதி! பின்னணியில் விமல்!!