ரணில் பேச்சை நம்பாதீர்-நாமல்

-நஜீப்-

சில தினங்களுக்கு முன்னர் பசில் மொட்டுக் கட்சி முக்கிஸ்தர்கள் கூட்டமொன்றை  தனது வீட்டில் நடாத்தி இருந்தார். அதில் தம்மிக பெரேரா, நாமால் ராஜபக்ஸா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது சஜித் தரப்பில் இருந்து அடுத்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் இருபத்தி ஐந்து பேர் (25) வரை வந்து இணைந்து கொள்ள இருப்தாக ஜனாதிபதி ரணில் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

Sri Lanka: President vows to annihilate future Aragalayas • Sri Lanka Brief

ஆனால் அவர் கூறுகின்ற படி யாரும் வர மாட்டார்கள் என்று பசில் கூற, ரணில் தேர்தலுக்கு வராவிட்டால் நான் வருவேன் என்றார் தம்மிக்க.  அப்போது நாமல் ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு போதும் வர மாட்டார். சஜித்திடமிருந்து யாரும் வரவும் போவதுமில்லை. அவர் பொய் சொல்கின்றார்.

ரணில் பேச்சை நம்ப வேண்டாம். தம்மிக ஐயா ஜனாதிபதி தேர்தலில் நிற்காது போனால் நான் தேர்தலுக்கு வருவேன் என்று நாமல் அங்கு தம்மிக்க பெரேராவுக்கு கூறி இருக்கின்றார். சரி 15ம் திகதி வரை பொறுத்திருப்போம் என்று அங்கு முடிவாம்.

நன்றி: 25.05.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மேற்கு வங்கம்: 77 சாதிகளின் ஒபிசி அந்தஸ்து ரத்து:அரசியல் சர்ச்சை

Next Story

கான்ஸ் திரைப்பட விழா: 30 ஆண்டுகளுக்குப் பிறகு ...