-நஜீப்-
நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்.
தேர்தல் களத்தில் முன்னாள் ஜனாதிபதி காட்சியிலே இல்லை. அவர் மூன்றாம் இடத்தில்தான் என்று நாம் சொல்லி இருந்தோம். முடிவுகளும் அப்படித்தான் வந்தது. தேர்தல் முடிந்தவுடன் ரணில் தலைமையில் சிரிகொத்தவில் கட்சிக் கூட்டம் நடந்தது. அப்போது மொட்டுக் கட்சியினர் நமக்கு வாக்குப் போடவில்லை.
அவர்கள் அனுரவுக்குத்தான் வாக்குகளை அள்ளிப் போட்டிருக்கின்றார்கள். இது எம்மீதுள்ள கோபமல்ல. ராஜபக்ஸாக்கள் மீது அவர்களுக்கு இருந்த கோபத்தைத்தான் இது காட்டுகின்றது என்று அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனை ரணிலும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். பொதுத் தேர்தலில் சஜித்தின்-ஐமக. சக்தியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசுமாறு ரணில் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தனாவைக் கேட்டிருக்கின்றார்.
ஆனால் ரணில் தேர்தலுக்கு வரப்போவதில்லையாம். கூட்டணிக்கு ஐமச. தரப்பில் இதற்கு சிலர் ஆதரவாக இருந்தாலும் சஜித்தும் பெரும்பலானவர்களும் ரணில் கூட்டணியை நிராகரிக்கின்றார்கள்.