யார் பெற்ற பிள்ளை இது!

-நஜீப்-

Godahewa appointed Insurance Corp. Chairman | Daily FT

கடந்த வாரம் ஊடகங்களில் ஒரு கருத்துக் கணிப்புப் பற்றி பேசப்பட்டது. அதில் சஜித் 39. அனுரா 20. மொட்டு 9. ரணில் 5. சவீதம்  என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இதனை ஒரு ஊடகச் சந்திப்பில் மொட்டுக் கட்சியில் இருந்து சஜித் பக்கம் தாவிய நாலக்க கொடஹேவா, மரிக்கார் மற்றும் அபேசிங்ஹ போன்றவர்கள் பரப்புரை செய்து வந்தனர்.

ஆனால் இப்படியான கருத்துக் கணிப்பை செய்த நிறுவனம் பற்றிய தகவல்கள் சொல்லப்படவில்லை. இந்தக் கேள்விக்கு அவர்கள் தரப்பு பதில் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் இது அம்மா-அப்பா இல்லாத ஒரு குழந்தை என விமர்சனங்கள்.

இப்படியான ஒரு கருத்துக் கணிப்பை சஜித் அணியே முன்பும் மேற்கொண்டு அதில் அவர்கள் முன்னணியில் இருப்பதாக அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் ஒரு முறை நமக்குச் சொல்லி இருந்தார்.

அன்று நாம் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று இதனை சுட்டிக் காட்டி இருந்தோம். அது போலத்தான் இந்தப் புதிய கணிப்பும் இப்போது அரசியல் களத்தில் விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது.

நன்றி: 24.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள்: 2024 (கருத்துக் கணிப்பு)

Next Story

கல்வி அமைச்சின் புதிய திட்டம்: மாணவர்களுக்கு சாதகமாக  தீர்மானம்