மொட்டுக்களுக்கு மஹிந்த ஓடர்!

-நஜீப்-

தமது கட்சியிலுள்ள சிலர் வரம்பு மீறி நடந்து கொள்கின்றார்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி தனது கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பாகவும் ஜனாதிபதி ரணிலை விமர்சித்து கருத்துக்களை வெளியிடுவதையும் தமது கட்சி உறுப்பினர்கள் கண்டிப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Sri Lanka: New President Should Chart Path Upholding Rights | Human Rights Watch

தமது கட்சியினர் இப்படி நடந்து கொள்வதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கடும் தொணியில் எச்சரித்திருக்கின்றார். இதற்கு முன்னரும் அவர் இப்படி எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. என்றாலும் அதனை எவரும் செவிமடுத்ததாகவும் தெரியவில்லை எனவே மஹிந்த மீண்டும் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

மொட்டுக் கட்சியில் இன்று பதவிகள் இல்லாமல்  இருக்கின்றவர்கள் ரணிலை விமர்சித்து வரும் போது பதவியில் இருக்கின்றவர்கள் ஜனாதிபதி ரணிலைப் புகழ்ந்து தள்ளி வருகின்றார்கள். இப்படி நடந்து கொள்வதன் மூலம் அவர்கள் ஜனாதிபியிடம் அதிக வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றார்கள் அதில் அவர்கள் வெற்றிகளையும் பெற்று வருகின்றார்கள்.

நன்றி: 09.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அரேபிகள் அமெரிக்காவுக்கு ஆப்பு!

Next Story

ஒரு குழப்பமான நிலை!