முஸ்லிம் அரசியலில் கிளர்ச்சி!

-நஜீப்-

தெற்கு அரசியலில் இன்று பெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அரசியலைத் தூய்மைப்படுத்துகின்ற புனிதப் பணி அங்கு பேசுபொருளாக இருக்கின்றது.

குடும்ப அரசியலுக்கும் வஞ்சக அரசியலுக்கும் முற்றுப் புள்ளி என்ற கோஷங்கள். இன ஐக்கியத்துக்கான அழைப்புக்கள். ஜனாதிபதி நெடுநாளாக வீட்டுக்காவலில். அரசியல்வாதிகள் பொது நிகழ்வுகளில் தலைகாட்டுவதில்லை.

நாடாளுமன்றத்தை விட போராட்டம் நடாத்துகின்ற இளசுகள் விடிவுதரக் கூடும் என மக்கள் நம்பும் நிலை. ஆனால் இலங்கை அரசியலில் மிகப் பெரிய டீல்காரர்களும் மோசடிக்காரர்களும் இருப்பது முஸ்லிம் தனித்துவ அரசியலில்தான்.!

டீல் வர்த்தகம் பண்ணியவர்களே ஒழுக்காற்று என்ற பெரிய வார்த்தைகளை உச்சரித்து சமூகத்தில் கைதட்டும் வங்கும் அவலம் நடக்கின்றது.

இந்த ஏமாற்று அரசியல் பிடியிலிருந்து சமூகத்தை விடுக்க வேண்டும். இதற்கான சந்திப்புக்கள் துவங்கி இருக்கின்றது என  ஏற்பாட்டாளர்களில் ஒருவர் நமக்குத் தெரிவித்தார்.

தேசிய அரசியலுக்கு இசைவாக முஸ்லிம்  அரசியலும் சரி செய்யப்பட வேண்டும். டில் வர்த்தகர்களின் பிடியிலிருந்து சமூகத்தை மீட்க வேண்டியது காலத்தின் தேவை என்பது நமது கருத்தும் கூட.

நன்றி:19.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா

Next Story

பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் பெற்றோரிடம்- பொலிஸார்