மத்திய வங்கி ஆளுநர் IMF பிரதி நிதிகளுடன் பேச்சு

எனினும் கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை தூதுக் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி அமரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளது.

இந்த நிலையில் இப்பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளமை முக்கியமானதாகும். அதேவேளை நிதி அமைச்சர் அலி சப்றி தலைமையிலான தூதுக் குழுவே இவ்வாறு 18 ஆம் திகதி அமரிக்காவின் வொசிங்டன் செல்லவிருந்த நிலையில் , மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த தூதுக் குழு, வொசிங்டனில் 5 நாட்கள் தங்கியிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

விலங்கிடப்பட்ட ராஜாக்கள்!

Next Story

போராட்டத்துக்கு ஓயாத அலைகள் என பெயரிட்ட சிங்கள ஊடகங்கள்!