மத நிகழ்ச்சி நெரிசல் பலி 110 ஆக உயர்வு

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110-ஐத் தாண்டியுள்ளது.உத்தரபிரதேசக் காவல்துறையின் ஆக்ரா மண்டல ஏ.டி.ஜி அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது. முன்னதாக, ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் பிபிசி நிருபர் தில்னாவாஸ் பாஷாவிடம், விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் கூறியிருந்தார்.

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 60 பக்தர்கள் உயிரிழப்பு
17 நிமிடங்களுக்கு முன்னர்

அப்போது, எட்டா மாவட்ட எஸ்எஸ்பி ராஜேஷ் குமார் சிங் கூறுகையில் , “ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஹி கிராமத்தில் போலே பாபாவின் (Bole Baba) நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, ​​நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் எட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன,” என்றார்.

முன்னதாக, எட்டா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி உமேஷ் குமார் திரிபாதி கூறுகையில், “இதுவரை 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் 25-க்கும் மேற்பட்டோர் பெண்கள். 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும்,” என்றார்.

மத நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோதி

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி ஹத்ராஸ் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்தார்.

“இந்த விவாதத்திற்கு இடையே எனக்கு ஒரு சோகமான செய்தி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. இறந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 60 பக்தர்கள் உயிரிழப்பு

முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதல்வர், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்து, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆக்ரா ஏடிஜி மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் சம்பவத்திற்கான காரணத்தை விசாரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.”

உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மத நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் பலி 100 ஆக உயர்வு - சமீபத்திய தகவல்கள்

மக்களின் கோபம்

காயமடைந்தவர்கள் சிக்கந்த்ராவ் அவசர சிகிச்சை மையத்துக்கு (Sikandrarao Trauma Centre) கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிபிசி பத்திரிக்கையாளர் தர்மேந்திர சவுத்ரி அந்த சிகிச்சை மையத்திலிருந்து சில வீடியோக்களை அனுப்பியுள்ளார், அதில் பாதிக்கப்ப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை தெளிவாகக் காண முடிகிறது.

சிகிச்சை மையத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், “இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது, ஆனால் ஒரு மூத்த அதிகாரி கூட இங்கு இல்லை. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை இங்கு நடத்த போலே பாபாவுக்கு அனுமதி வழங்கியது யார். அரசு நிர்வாகம் எங்கே போனது?” என்கிறார்.

காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சை மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

வீடியோவில், சிகிச்சை மையத்திற்கு வெளியே தரையில் பெண்களின் சடலங்கள் கிடப்பதைக் காணலாம்.

சிகிச்சை மையத்திற்கு வெளியே பதற்றமான சூழல் நிலவுகிறது, மேலும் மக்கள் தங்கள் குடும்பத்தினரைத் தேடி கூச்சல் எழுப்பி வருகிறார்கள்.

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 60 பக்தர்கள் உயிரிழப்பு

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என்ன சொன்னார்?

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் எக்ஸ் தளத்தில், “ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மனவேதனையை கொடுக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீட்புப் பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்தது யார்?

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 60 பக்தர்கள் உயிரிழப்பு
ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார்

இந்தச் சம்பவம் பற்றி ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறுகையில், ​​”மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்கள் இன்னும் மீட்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 50-60 பேர் வரை உயிரிழந்ததாக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர்,” என்றார்.

“இந்நிகழ்ச்சிக்கு அனுமதி சப்-கலெக்டரால் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி. இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதே நிர்வாகத்தின் முதன்மை நோக்கம். காயமடைந்தவர்களுக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் முடிந்த உதவிகள் செய்து வருகிறோம்,” என்றார்.

Previous Story

கார்டியன் நியூஸ்(3) 03.07.2024

Next Story

 புதிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்