பைடன்:மன்னிப்பு கோரினார்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘மைக்இருப்பதை அறியாமல் செய்தியாளர் ஒருவரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு பின் பெருந்தன்மையுடன் மன்னிப்பு கோரினார்.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பணவீக்கம் குறித்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போதுபாக்ஸ் நியூஸ் டிவிசெய்தியாளரான பீட்டர் டூசி, ”பணவீக்கத்தை அரசியல் சுமையாக கருதுகிறீர்களா,” என கேட்டார்.


அதை மறுத்த ஜோ பைடன், ‘மைக்இருப்பதை அறியாமல்அதிக பணவீக்கம் என்பது அதிக சொத்து,” என கூறினார்.பின், கேள்வி கேட்ட பீட்டர் டூசி மீதுள்ள கோபத்தில் கெட்ட வார்த்தையை முணுமுணுத்தார். இது மைக்கில் பதிவானது பற்றி பின் அறிந்த ஜோ பைடன், ஒரு மணி நேரத்தில் பீட்டர் டூசியை தொலைபேசியில் அழைத்து, தனிப்பட்ட முறையில் திட்டவில்லை என கூறி மன்னிப்பு கோரினார்


.
பீட்டர் டூசி கூறும்போது, ”ஜோ பைடன் தன் தவறை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது,” என்றார்.

Previous Story

சாணக்கிய சபாஷ்!

Next Story

பல்கலைக்கழகத்தில்"ஜாதியை"அடக!