–நஜீப்–
என்னதான் அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும் நமது பிரதமர்-அப்பச்சி இந்த நாட்டில் தனக்கென தனியாக ஒரு இமேஜைக் கட்டி எழுப்பி இருந்தார். அவர் கட்டிய கோட்டைக்குள் வந்து இடையில் செருகிக் கொண்டவர்கள்தான் அவரது தம்பிமார்.
இரு தோனிகளில் நின்று அரசியல் பயணம் செய்யும் அவர்கள் நடவடிக்கைகள் தற்போது அப்பச்சிக்கு மக்கள் மத்தில் இருந்த செல்வாக்கை அடியோடு சரித்து விட்டிருக்கின்றது.
இதனை அவர் தற்போது தமக்கு நெருக்கமானவர்களிடத்தில் பகிரங்கமாகப் பேச ஆரம்பித்திருக்கின்றராம். இங்கு எல்லாப் பிரச்சனைகளையும் உண்டு பண்ணிவிட்டு அவர்கள் தமது குடும்பங்களுடன் போய் ஒட்டிக் கொள்வார்கள்.
நானும் எனது பிள்ளைகளும்தான் இங்கு கடைசி வரை வாழ வேண்டும். இறுதிக் காலத்தில் நிம்மதியாக எனக்கு சாகக் கூட இடம் வைக்காமல் பண்ணிவிட்டார்கள் இரட்டை குடியுரிமைக்காரர்கள் என்று அவர் தனது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றாராம்.