இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க (Dr.B.Nandalal Weerasinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கும் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 7ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இராஜினாமா குறித்து அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.