பிரதமர் விவகாரம் பொய் பேசுவது யார்?

“தனியார் வைத்தியசாலையில் மஹிந்தவுக்கு சத்திர சிகிச்சை ” -உறுதி செய்த சகோதரர்  சமல்-

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் கம்பளையில் நடைபெறவிருந்த வைபவம் ஒன்றில் அவரை பிரதிநிதித்துவம் செய்து கலந்து கொண்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சத்திரசிகிச்சை காரணமாக பிரதமரால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், அவரின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.

எனினும் கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் பிரதமருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளியான  செய்தியை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

தானும் தனது தந்தை நவலோக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை பார்க்க சென்றதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

அமெரிக்காவில் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

Next Story

ஜோர்டான் 27 கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்