–நஜீப்-
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் போது நிறையவே வாக்குறுதிகள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது பற்றி முன்னிலை சோசலிஸ கட்சி முக்கியஸ்தர் புபுது ஜாகொட ஒரு கதையைச் சொன்னார்.
அவர் கதைப்படி 8 பேருக்கு பிரதமர் பதவி. 60 வரையிலானவர்களுக்கு அமைச்சுப் பதவி. இன்னும் 60 பேருக்கு இராஜங்க அமைச்சு என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றதாம்.
இதில் வேடிக்கை என்ன வென்றால் எதிரணியில் இருக்கின்ற பலருக்கும் பிரதமர் அமைச்சுக்கள் இராஜங்க அமைச்சுக்கள் தருவதாக சொல்லபட்டதாகவும் தெரிகின்றது.
இவை எல்லாம் கூட்டிப் பார்க்கின்ற போது ரணில் பெற்ற வாக்குகளுக்கும் வாக்குறுதிகளின் கூட்டுத் தொகைக்கும் சரியாக வருகின்றது என்று நமக்கு அவதானிக்க முடிகின்றது.
இப்போது பலர் ரணிலுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இந்த வாக்கெடுப்பின் போது நான்கு பேர் வாக்கை செல்லுபடியற்றதாக்கி இருந்தனர்.
இது பணத்தைப் பெற்றுக் கொண்டு மாறி வாக்களிப்பார்கள் என்று சந்தேகிப்பவர்களிடம் அப்படி நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்கத்தான் அவர்கள் அப்படிச் செய்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.