பாலியல் பொம்மைகள்..”

புதுசாக யோசிக்கும் சீன தொழிலதிபர்கள்..

சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஏஐ உடன் கூடிய பாலியல் பொம்மைகளை உருவாக்கி வருகிறது. இந்த பாலியல் பொம்மைகளால் மனிதர்களுடன் நெருக்கமாக இருப்பது மட்டுமின்றி, அவர்களுடன் உரையாற்றவும் முடியுமாம். இதன் மூலம் மனிதர்களுக்கு அப்படியே ஒரு நபருடன் இருக்கும் ஒரு உணர்வு ஏற்படுமாம்.

மனிதர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறார்கள். தொழிற்சாலை, கணினி, மொபைல்கள் என காலத்திற்கு ஏற்ப பல்வேறு விஷயங்களை உருவாக்கி வருகிறார்கள்.

ஏஐ தொழில்நுட்பம்: இதுபோன்ற கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் இருக்கிறது. இவை நமது வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போடுவதாகவே இருக்கிறது. அதன்படி இந்தக் காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் மிக மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. பல துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தருகிறது.

இப்போது நீங்கள் கனவிலும் எதிர்பார்க்காத விஷத்தில் கூட ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது தான் செக்ஸ் டால் எனப்படும் பாலியல் பொம்மைகள். இப்போது இந்த பாலியல் பொம்மைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்தவுள்ளனராம். இதன் மூலம் அந்த பாலியல் பொம்மைகளுடன் அதைப் பயன்படுத்துவோரால் பேசவும் முடியும்.

யூசர்களின் அனுபவத்தை இது மேம்படுத்தும் என்றும் பொம்மையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்ற உணர்வை இது மறக்க வைக்கும் என்றும் இதை உருவாக்கியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  எப்படி: வழக்கம் போலச் சீனா தான் இது தொடர்பாகத் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது. சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தை இந்த செக்ஸ் பொம்மைகளில் அவர்கள் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் யூசர்களால் மனிதர்களைப் போலவே இந்த பாலியல் பொம்மைகளுடன் பேசவும் கூட முடியும். இதற்காக செக்ஸ் பொம்மைகளை அதிகம் உற்பத்தி செய்யும் ஸ்டார்பெரி டெக்னாலஜி என்ற நிறுவனம் சாட் ஜிபிடியை போலச் சொந்தமாக ஒரு மாடலை உருவாக்கி வருகிறார்கள்.

ஏஐ வசதியுடன் கூடிய இந்த இந்த செக்ஸ் பொம்மைகள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று ஸ்டார்பெரி நிறுவனம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சிஇஓ இவான் லீ கூறுகையில், “நாங்கள் அடுத்த தலைமுறை பாலியல் பொம்மைகளை உருவாக்கி வருகிறோம். இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இதை விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த பொம்மைகளால் நெருக்கமாக இருப்பது மட்டுமின்றி, மனிதர்களுடன் பேசவும் முடியும். அதேநேரம் இதில் பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் உள்ளன.. குறிப்பாக இது பேசுவது துல்லியமாக மனிதர்களைப் போல இருக்க வேண்டும். இது கொஞ்சம் தவறினாலும் ரோபோ போல மாறிவிடும். அது யூசர்களின் அனுபவத்தை மொத்தமாகக் கெடுக்கும்.. எளிமையான உரையாடல்களை உருவாக்குவது ஈஸி.. ஆனால், மனிதர்கள் பேசும் போது அதைக் கேட்டு அழகேற்ப துல்லியமாகப் பதில் அளிப்பதைப் போல வடிவமைப்பது கடினம்.

இதில் தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார். வித்தியாசம் என்ன: பொதுவாக உருவாக்கப்படும் பாலியல் பொம்மைகளின் உள்ளே எலும்பு போன்ற உலோகம் இருக்கும். வெளியே சிலிகான் இருக்கும். இவை மனிதர்களுடன் பேசும் அளவுக்கான திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

அதேநேரம் ஏஐ உடன் வரும் பாலியல் பொம்மைகளில் சென்சார்கள் இருக்கும்.. சிறு இயக்கங்கள் மற்றும் பேச்சு இரண்டிலும் மனிதர்களுக்கான பதிலை அது தரும். அடிப்படை உரையாடல் மற்றும் நெருக்கமாக இருப்பது என இரண்டையும் இந்த பாலியல் பொம்மைகளால் செய்ய முடியுமாம்.

Previous Story

வாராந்த அரசியல் 23.06.2024

Next Story

கார்டியன் நியூஸ்(2) 26.06.2024