தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாண் ஒன்றின் விலை இந்த வருடம் இறுதியாகும் போது 400 ரூபா வரையில் போகும் என நாமல் தம்மிடம் கூறியதாக ஓமல்பே சோபித்த தேரர் சற்று நேரத்துக்கு முன்னர் நடந்த ஊடகச் சந்திப்பொன்றில் கூறினார். அதே போன்று ஏனைய பொருட்களிலும் விலை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமருடனான இந்த சந்திப்பு 29.05.2022 திகதி நேற்று மாலை ஆறு மணியளவில் நடந்த போது அதில் கலந்து கொண்ட நாமல் இதனைப் பற்றிக் கூறினார். இதே ஓமல்பே சோபித்த தேரர் பிரதமர் விலகுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் அவர் அந்த ஊடகங்களுக்கு முன்னர் குறிப்பிட்டார்.
ஆனால் பிரதமரோ தன்னை எவரும் வெளியே போகும்படி சொல்லவும் முடியாது தான் அப்படிப் போகப் பேவதுமில்லை. நான் போவதாக இருந்தால் ஒருவரை நியமிப்பதும் நானே என்றும் பிரதமர் கூறி வருகின்றார். மேலும் சமயல் எரிவாயு ஒன்றின் விலை 10000 வரை போகும் என்றும் அந்த சந்திப்பில் சொல்லப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுக்கின்றது.