படகேறி சிறைக்கு வரும் கூத்து!

-நஜீப்-

நான்கு குற்றச்சாட்டுகள் மீது பலியல் பலத்காரம் செய்ததாக  கிரிக்கட் வீரர் தனுஷ்க குனதிலக்க மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தி  விவகாரத்தில் அவர் இன்று சிறையில். குறைந்தது இந்த வழக்கு முடிவடைய பத்து மாதங்கள் வரையில் செல்லும் என்று சொல்லப்படுகின்றது.

ஆனால் தனுஷ்க மீதான இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்கும் பாணியில்தான் பெரும் பாலான ஊடகங்கள் செய்திகளைச் சொல்லி வருகின்றன. கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையில் உள்ள அதிகாரிகளும் இதே நிலைப்பாட்டில்தான் பேசிக் வருகின்றார்கள்.

அவர் ஒரு இளவயதுக்காரர் அப்படியெல்லாம் நடந்து கொண்டது ஒரு பெரிய கதையே கிடையாது என்றும் பலர் பேசுகின்றார்கள். சிலர் திட்டமிட்டு சிக்கவைத்து விட்டார்கள் என்றும் கதைகளைச் சொல்லி வருகின்றார்கள். ஆனால் தனுஷ்க பலமுறை இப்படியான தண்டனைகளில் சிக்கித் தண்டிக்கபட்டும் இருக்கின்றார்.

இவர் கட்டுப்பாடுகளை மதித்து நடக்கும் பழக்கம் உள்ளவர் அல்ல என்றும் சொல்லப்படுகின்றது. இந்த விவகாரத்தில் அவர் படகில் நெடுந்தூரம் போய்த்தான் இந்தக் குற்றத்தை செய்திருக்கின்றார் என்று நீதி மன்றத்தில் சாட்சிகள் முன்வைக்கபட்டிருக்கின்றன. இந்த சுற்றில் இது போன்ற பல நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும் ஒரு செய்தி.

நன்றி:13.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஹக்கீம்-ராஜாக்கள் உரிமைப் போர்!

Next Story

ஒரு கோலில் அமைச்சு பதவி!