பசிலின் தெரிவுதான் ரணில்!

-நஜீப்-

இன்று ஒரு ஆசனத்தை வைத்திருக்கின்ற ரணில்தான் நமது ஜனாதிபதி. இலங்கை அரசியல் யாப்பை உலகம் மூக்கில் விரல் வைத்துப் பார்க்கின்ற ஒரு நிலை இதனால் ஏற்பட்டிருக்கின்றது. இந்த ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ததில் சூத்திரதாரி ஏழுதலை முன்னாள் நிதி அமைச்சர் பசில்தான் என்று மொட்டுக் கட்சி முக்கிஸ்தர்கள் இப்போது பகிரங்கமாக பேசி வருகின்றார்கள்.

எனவே நாடாளுமன்றத்தில் இருக்கின்ற மொட்டுக் கட்சியினர் பிடி இன்று பசில் ராஜபக்ஸ கட்டுப்பாட்டில்தான் இருப்பது தெளிவாகத் தெரிக்கின்றது. எனவே ஜனாதிபதி ரணிலும் மொட்டுக் கட்சியினரையும் நூலில் ஆடுகின்ற பெம்மையாகத்தான் ராஜபகஸாக்கள் அவர்களை வைத்திருக்கின்றார்கள்.

அரசியல் யாப்பு நீதி சட்டம் எல்லாம் செல்லுபடியற்றதாக்கி இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகப் பார்க்கின்ற போது அரச இயந்திரம் திட்டமிட்டுத் தற்போது குழப்பியடிக்கப்பட்டு வருகின்றது. அறிவுப்புச் செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் இந்தப் பின்னணியில்தான் கானல் நீராகிக் கொண்டிருக்கின்றது.

நன்றி: 26.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை!

Next Story

கடனுக்கு விழா நடாத்தும்  தேசம்!