பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது – ஹசீனா

பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என்று அந்த நாட்டின் பிரதமர் இன்று -30- தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் .

பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கை போன்ற சூழ்நிலையில் மூழ்காது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார் .

அத்துடன் நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும் கடந்து தொடர்ந்து முன்னேறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக இருக்காது , இருக்க முடியாது என்ற ஒரு விடயத்தை அனைவரும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் .

ஏற்கனவே எதிர்கட்சியின் ஆட்சியில் பங்களாதேஷ் இலங்கை போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது .

எனினும் தமது கட்சி அந்த நிலைமையை மாற்றியுள்ளதாக பிரதமர் கூறினார் . தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 47 வது தியாக நினைவு தினத்தைக் குறிக்கும் நிகழ்வில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்

Previous Story

 பாபர் ஆஸம்: 'வெற்றி அடையாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்'

Next Story

மரணத்துக்காக காத்திருந்த பழங்குடி மனிதன் உயிரிழப்பு