நாளை என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது: அமைச்சர் கெஹலிய

நாளை என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது எனச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அச்சத்துடனேயே செல்வதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை சவால் மிக்கது எனவும், இந்த நிலைமை குறித்து நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.தற்பொழுது அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்வது பொருத்தமானது அல்ல எனவும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Story

இங்கு பந்து பட்டால் ரூ.5 லட்சம்.!

Next Story

புலம்பெயர் இலங்கையர்  பணம்: அரசு பல்டி