-நஜீப்-
மஹிந்த ராஜபக்ஸாவின் மூத்த மகனும் அரசியல் வாரிசுமான நாமல் மின்சார சபைக்கு 26 இலட்சம் ரூபாய்களை செலுத்தாது ஏமாற்றுகின்றார் என்பது குற்றச்சாட்டு. அண்மையில் மொட்டுக் கட்சி உறுப்பினரும் நாமலின் நண்பருமான சாந்த நிசாந்த அந்தப் பணத்தை செழுத்தி இருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸா மீதுள்ள நல்லெண்ணம் காரணமாக இந்தப் பணத்தை தனது இறால் பண்ணை வருமானத்தில் செலுத்தியதாக சொன்னார். தனக்கு இதுவரை அப்படி ஒரு மின்சார ரசீதே கிடைக்கவில்லை என்பது நாமல் நிலைப்பாடு. நாம் இது பற்றித் தேடிப் பார்த்த போது நாமல் ராஜபக்ஸா திருமணத்துக்கு அமைக்கப்பட்ட கொட்டகைக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க செலுத்த வேண்டிய தொகைதான் இது.
இது மின் கட்ணம் அல்ல. இந்த இடத்திற்கு மின்சார இணைப்பை வழங்குமாறு சனக்க என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டதன் பேரில் அன்று அமைச்சராக இருந்த ரவி கருணாரத்ன வழங்கி ஒரு கடிதத்தின் பிரகாரம் இந்த இணைப்பு காசு பெறாமல் வழங்கப்பட்டிருக்கின்றது.
புதிய இணைப்பு வழங்கும் போது அதற்கு கட்டணம் பெற்றுக் கொண்டுதான் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் அமைச்சர் ரவியின் சிபார்சு காரணமாக பின்னர் காசு தருவதாக இந்த இணைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் முன்கூட்டி இப்போது பணத்தை செலுத்தி இருக்கின்றார்கள்.
நன்றி: 22.10.2023 ஞாயிறு தினக்குரல்