நானில்லாமல் நீயில்லை!

-நஜீப்-

கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் நகைச்சுவை பற்றி சொல்லி இருந்தோம். அதே ஆல் தேசிய அரசு ஒன்று அமையுமாக இருந்தால் ரணில்தான் அதன் பிரதமர். அப்போதுதான் நாட்டையும் மக்களையும் காப்பற்ற முடியும் என்று இந்த வாரம் புதுக் கதை சொல்லி வருகின்றார்.

சிரிக் கொத்தாவை ஒரு சமையம் கட்சிக்காரர்கள் முற்றுகையிடப் போன போது அந்தப் பாதைக்குத் கார்ப்பட் போட வேண்டி இருக்கின்றது. யாரும் அந்தப் பக்கம் நுழையக் கூடாது என்று அப்போது ஜனாதிபதி எம்.ஆர். ஆட்களை விரட்டியடித்து ரணிலுக்காக சிரிக் கொத்தாவை காத்துக் கொடுத்தார்.

இப்போது உலக நாடுகள் அனைத்தும் இலங்கையைக் கைவிட்டிருக்கின்ற நேரத்தில் ரணிலை முன்னுக்குத் தள்ளி ஏதாவது பண்ணலாம் என்ற ஒருவாதம் முன் வைக்ப்படுகின்றது. இந்தப் பருப்பு ஒரு நாளும் வேகாது. ஆனால் மஹிந்தாவுக்கும் ரணிலுக்கும் ஒருவரை விட்டால் ஒருவர் இல்லை என்ற உறவு நீடிக்கின்றது.

நன்றி ஞாயிறு தினக்குரல் 16.01.2022

Previous Story

நெருக்கடி: தப்புவதற்கு கோட்டாபய முடிவு!

Next Story

சுதத்த திலகசிறி CIDக்கு