நாட்டை ஒருவாரகாலம் முடக்க ஆலோசனை ! கொழும்பு வரும் ஜேவிபி ஊர்வலத்துக்கு அச்சமா?

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் , ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் இன்றுமாலை விசேட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தெற்கிலிருந்து-பேருவளை ஜேவிபி  ஊர்வலம் ஒன்றை 19ம் திகதி கொழும்புக்கு அழைத்து வர இருப்பததால்தான் இந்தத் திட்டம் என்றும் பேசப்படுகின்றது.

 

Previous Story

பிரதமரை நிராகரித்த கைக்குழந்தைகள்!

Next Story

கோ ஹோம் சாதனைகள்!