-நஜீப்-
ஜேவிபி. நாடுபூராவும் தனது மக்கள் சக்தி அமைப்பை பலப்படுத்தி வருகின்றது. அங்கு கூட்டம் நிரம்பி வழிகின்றது. ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் அங்கு அலை மோதும் காட்சி.
மேலும் இவர்கள் ஊர் ஊராக சில மாதங்களுக்கு முன்னர் பரப்புரைக்குப் போனபோது மக்கள் இந்த அரசாங்கத்தை தமாதிக்காமல் விரடியடிப்பது பற்றி ஆக்ரோஷமாக பேசிவருவதைப் பார்க்க முடிவதாக கூறுகின்றார்கள்.
அரசாங்கத்தை பதவிக் காலம் முடிந்தும் விரட்டலாம். பதவியில் இருக்கும் போதும் விரட்டலாம். இரு வழிகள் இருக்கின்றன. அது மக்கள் கைகளில்தான் இருக்கின்றது. ஜேவிபி தொழிற்சங்கத் தலைவர் லால் காந்த நாங்கள் ரெடியாகத்தான் இருக்கின்றோம்.
நீங்கள் ரெடியா என்று மக்களிடத்தில் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றார். சில தினங்களுக்கு முன்னர் சமயல் எரிவாயு விலை அதிகரிப்புச் செய்ததால் கசகஸ்தானில் மக்கள் வீதியில் இறங்கிய போது ஆட்சியாளர்கள் ஓட்டம் எடுத்திருந்தனர்.
-நன்றி ஞாயிறு தினக்குரல் 09.01.2022