நயவஞ்சகர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்போம்!

சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக கண்டி மாவட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பொன்று மிக விரைவில் அமைய இருக்கின்றது.

சமூகத்தை அரசியல் வியாபாரிகள் டீல்கார்கள் சந்தர்ப்பவாதிகள் நயவஞ்சகர்களிடமிருந்து பாதுகாக்கும்-மீட்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற இந்த சிவில் அமைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் சமூக நலவிரும்பிகள் பற்றிய தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புனிதப் பணியில் பங்கு கொண்டு உழைக்க விரும்புகின்றவர்களின் சந்திப்பு விரைவில் கண்டி நகரில் நடைபெறும். அதில் வந்து பங்கு கொள்ள விரும்புகின்றவர்கள் தயார் நிலையில் இருக்கவும்.

இப்படியானதொரு அமைப்பில் அவசியத்தை தெளிவுபடுத்தி சமூகத்தை தயார் நிலையில் வைத்திருக்குமாறு நாம் சமூக ஆர்வலர்களிடத்தில் மேலும் கேட்டுக் கொள்கின்றோம்-அழைப்புவிடுகின்றோம்.  மேலதிக விபரங்கள் விரைவில் தரப்படும்.

மிக்க நன்றி
Previous Story

அனுரவுக்கு அடங்க மாட்டேன்-காரியப்பர்

Next Story

பொதுத் தேர்தலுக்கான கூட்டணி போடுவதில் இணக்கமும் முரண்பாடும்