–நஜீப்–
தலைமறைவாக இருந்த ஞானசாரத் தேரர் மீண்டும் வேதாளம் முறுங்கை மரம் ஏறுவது போல பழைய தனது இனத்துவேசத்தை கக்கத் துவங்கி இருக்கின்றார்.
தனது தலைமையில் சிபார்சு செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி அறிக்கையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டிருக்கின்றார்.
அதே நேரம் ரணில் தலைமையிலான அரசு இதனை தாம் அமுல் படுத்தப் போவதில்லை என்று ஏற்கெனவே சொல்லி இருந்ததும் தெரிந்ததே.
ராஜபக்ஸாக்கள் தலைமறைவாக இருந்து வெளியே வந்து அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட முனைந்திருக்கின்ற இந்த நேரத்தில் ஞானத்தாரும் சமாந்திரமாக தனது இன வன்முறைக் கருத்துக்களை மீண்டும் துவங்கி இருப்பதைத்தான் அவரது இந்தக் கருத்தக்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.
எனவே மீண்டும் ஒரு தேர்தல் வருகின்ற போது ராஜபக்ஸாக்களும் ஞானத்தாரும் இணைந்து மீண்டும் சிறுபான்மையினருக்கு எதிரான விசமத்தனமான பரப்புரைகளை ஆரம்பிக்க நிறையவே இடமிருக்கின்றது.
அதற்காக கருத்தடை ஷாபி, கருத்தடைக் கொத்து, உள்ளாடைகளுக்குப் பதிலாக ஏதாவது புதிய கண்டுபிடிப்புக்களுடன் இவர்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
நன்றி:09.10.2022 ஞாயிறு தினக்குரல்