தேர்தல் திருத்தம் ……?

தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணை தேர்தலை தாமதப்படுத்தும் மற்றொரு முயற்சி என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏற்கனவே தனது அறிக்கையை வழங்கியுள்ள நிலையில், இன்னுமொரு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிக்குமாறு கோரி நீதியமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சியாகவே இது மேற்கொள்ளப்படுகிறது.

தேர்தல் தொடர்பான கோரிக்கை

தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் | Committee Amendment Of The Electoral System

ஏற்கனவே மாகாண சபைத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தநிலையில் தற்போதைய நாடாளுமன்றத்தையும் கலைத்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.

Previous Story

தென்கொரியா: நெரிசல் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Next Story

சாம்பலும் கானலும்!