துரோகி ஹீரோவான கதை!

-நஜீப்-

இந்த வாரம் நாடு முழுவதும் உச்சரிக்கப்பட் நாமம் டாக்டர் சாபி சிஹாப்தீன். ஒரு தனி மனிதனது தேர்தல் வெற்றிக்காக சிங்களப் பெண்களை மலட்டுத்தனம் பண்ணி விட்டார் என்ற போலியான குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டு டாக்டர் சாபிக்கு தேசத்துரோக பட்டத்தை வழங்கி, அவர் சார்ந்த சமூகத்துக்கும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து ஆளை சிறையிலும் தள்ளினார்கள்.

அவரது  குழந்தைகள் பள்ளிப் பக்கம் தலைகாட்ட முடியாத நிலையும் வந்தது. குறிப்பிட்ட குற்றச்சாட்டில் இருந்து சாபி நிரபராதி என்று தீர்ப்பளித்து அவரைக் விடுவித்து, சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்ட நாட்களுக்கான சம்பளத்தையும் வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

பாக்கி சம்பளத்துக்கான (2675816.48) காசோலையை அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் கிடையக்க, நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மருந்து தட்டுப்பட்டை நீக்க அந்தப் பணத்தை உடனே அவர் திருப்பி வைத்தியசாலைக்குக் கையளித்து விட்டார். இதனால் இன்று முழு நாடும் மனிதனை ஹீரோவாகப் புகழ்கின்றது.

நன்றி:19.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காட்டுத் தீ-01

Next Story

திரைப்  படம் O2 எப்படி ?