இன்று கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியில் மாணவர் சந்தையொன்று நடைபெற்றது. தரம் இரண்டில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்காக 01.11.2022ல் நடாத்தப்பட்ட இந்த சந்தையில் பிடிக்கப்பட்ட ஒரு படம் இது.
சீரற்ற கால நிலையிலும் பெருந்தொகையான பெற்றோர் அதில் பங்கு பற்றி இருந்ததை அவதானிக்க முடிந்தது. இரண்டாம் தரத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கான இந்தச் சந்தையை அந்த வகுப்புக்களில் பாடம் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.